முத்துப்பேட்டையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் தவறி விழுந்து பலி.

12/13/20130 comments





திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை இலேசான காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்த பகுதியைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிகக் செல்லவில்லை.

 இந்த நிலையில் நேற்று காலை மேகமூட்டம் சாதாரணமாக காணப்பட்டதால் முத்துப்பேட்டை தெற்குத்தெரு கோரையாற்று கரையிலிருந்து படகு மூலம் மீன் பிடிக்க அதே பகுதியைச் சேர்ந்த கமால் முகைதீன், பரிதுஉஸ்மான், அப்துல் சலாம், தாவூது இப்ராஹிம், தாவூது, தருஸ் மரைக்காயர், ராஜ்முகம்மது ஆகிய 7 மீனவர்கள் தனிப் படகு மூலம் கடலுக்கு நேற்றுக் காலை 8-மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

சுமார் மதியம் 12 மணியளவில் கடலுக்கு அருகில் கழிமுனை லகூன் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராஜ்முகம்மது(57) அப்பொழுது வீசிய காற்று மற்றும் குளிர் காரணமாக நடுக்கம் ஏற்பட்டு படகில் விழுந்தார்.
 இதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடன் ராஜ்முகம்மது உடலை கூடச்சென்ற 6 மீனவர்களும் முத்துப்பேட்டை தெற்கத்தெரு கோரையாற்று கரைக்கு படகு மூலம் கொண்டு வந்து சேர்த்தனர். பலியான ராஜமுகம்மதுக்கு மனைவி மற்றும் நிஷா தமீம் அன்சாரி ஆகிய குழந்தைகள் உள்ளன.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலிசார் மற்றும் கடலோர காவல்படை போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர் சங்க தலைவர் முகம்மது இஸ்மாயில் கூறுகையில் காற்று மழையின் காரணமாக மீன் பிடிக்க யாரும் செல்லவில்லை.

இந்த நிலையில் இன்று காலை(நேற்று) இவர்கள் 7 பேரும் மீன் பிடிக்கச் செல்லும்பொழுது மீனவர் ராஜ்முகம்மது பலியானானர். மிகவும் ஏழை மீனவ குடும்பத்தைச் சேர்ந்த அவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றார்.

படம் செய்தி :

1.மீனவர் ராஜ்முகம்மது பழைய படம்.

2. மீன் பிடிக்கச் சென்ற படகு.


3. முத்துப்பேட்டை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது பலியான மீனவர் ராஜ்முகம்மது உடல்.











தகவல்:முகைதீன் பிச்சை நிரூபர்






Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech