சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்

12/21/20131comments

திருவாரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் திருவாரூர்யில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தமிழகத்தில் மாவட்ட அளவிலான சட்டம் ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் ஆண்டுக்கு 2 முறையென மார்ச், டிசம்பர் மாதங்களில் நடக்கிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது அலி, மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி பாலசுப்பிரமணியன், மாவட்ட எஸ்.பி காளிராஜ் மகேஷ்குமார் உட்பட காவல்துறை, நீதித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிதுறையில் பதிவான வழக்குகள் உட்பட பல்வேறு தகவல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.



Share this article :

+ comments + 1 comments

23/12/2013, 02:02

"வாய்மையே வெல்லும்" என்று இருக்க வேண்டும் ஆனால் "வாய்மையே லெல்லும்" என்று இருப்பது தவறு .

முத்துப்பேட்டை சுல்தான் அப்துல் காதர் -ஷார்ஜா

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech