ஐநா கூடத்தில் ராஜபக்சே பங்கேற்க எதிர்ப்பு முத்துப்பேட்டையில் தி.மு.க வினர் வீடு கடைகளில் கருப்பு கொடி ஏற்றி பேரணி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் 25.09.2014 அன்று இலங்கை அதிபர் ராஜபக்சே ஐநா சபை கூடத்தில் பங்கேற்பதை கண்டித்து திமுக வினர் ஒன்றிய, நகரம் முழுவதும் தங்களது வீடுகள,; கடைகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் மன்னை சாலை ரயில்வே கேட்டிலிருந்து தி.மு.க வினர் கருப்பு சட்டை அணிந்து நாகை முன்னால் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் மாவட்ட துணைசசெயலாளர் கார்த்திக,; கோட்டூர் ஒன்றிய செயலாளர் தேவதாஸ், நகர துணைச்செயலாளர் நவாஸ்கான், பேரூராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன,; ஜகபருல்லா, மாவட்ட பிரதிநிதிகள் தமிம், அகமது இபுராஹிம், நகர அவைத்தலைவர் ராமஜெயம், வார்டு நிர்வாகிகள் பாலு, செல்வம், ஆறுமுகம், யூசுப், பியூட்டி நவாஸ்கான், சிவகுமார், கமால், சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேரணியாக பழைய பஸ்டான்ட் வரை வந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர்.


Post a Comment