திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை OMA மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தமிழக அரசின் பசுமை திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மாவட்ட வன அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
மன்னார்குடி வனச்சரக அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளியின் முதல்வர் சாமிநாதன் வரவேற்று பேசினார். திருத்துறைப்பூண்டி வனவர் சுந்தரேசன், வனகாவலர் கணபதி செல்வம், தோட்ட காவலர்கள் மோகன், நல்லசிவம,; ரவி, ராஜேந்திரன், ஆதிகேசவன,; தியாகராஜன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் பல்வேறு ராக மரக்கன்றுகளை நட்டனர்.,
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். முடிவில் பள்ளி தாளாளர் ரெங்கசாமி நன்றி கூறினார்.
நன்றி:முகைதீன் பிச்சை ரிப்போட்டர்

Post a Comment