முத்துப்பேட்டை செப்-24
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் இன்று நடந்த மக்கள் நேர்காணல் முகாமிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் வந்திருந்தார.; நிகழ்ச்சி முடிந்து திரும்ப புறப்பட்ட கலெக்டரிடம் பத்திரிகையாளர்கள் இந்திய அரசு விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் முதல் முயச்சியில் முதல் வெற்றியாக மங்கள்யான் விண்கலத்தை செலுத்தியதற்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கி பகிர்ந்துக்கொண்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத கலெக்டர், மகிழ்ச்சி அடைந்து அந்த (முகைதீன்பிச்சை) பத்திரிகையாளரை கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டர். இதனை கண்ட மற்றவர்களும் சந்தோசம் அடைந்தனர்.


Post a Comment